Connect with us
 

News

தெரு நாய்கள் உயிரைக் காப்போம் – அவை நம்முடைய சமூகத்தின் ஒரு அங்கம் !

Published

on

சென்னையில் தெரு நாய்கள் பாதுகாப்பிற்காகவும், அவற்றை மீட்டெடுக்கவும் பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்றது. சமூக ஆர்வலர்கள், விலங்கு நேசிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்கள், தெரு நாய்களை கொல்லுதல் அல்லது அகற்றுதல் தீர்வாகாது, அவற்றிற்கு கருத்தடை (ABC) மற்றும் தடுப்பூசி செலுத்துதல் மட்டுமே நீடித்த தீர்வு என வலியுறுத்தினர். மேலும், “தெரு நாய்களும் நமது சமூகத்தின் ஓர் அங்கம்” என்ற முழக்கங்களுடன் ராலியாக நகரம் முழுவதும் சென்றனர்.

இப்போராட்டம், விலங்குகள் மீதான அன்பையும், அவற்றின் உரிமைகள் மீதான மக்களின் விழிப்புணர்வையும் வெளிப்படுத்தியது.

 

 

Continue Reading