Connect with us
 

News

சாலையோர தொழிலாளிக்கு ஒரு லட்சம் நிதியுதவி செய்தாரா அஜித் குமார்?

Published

on

சாலையோர இட்லி கடைக்காரர் ஒருவருக்கு அஜித் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்ததாக தற்போது ஒரு தகவல் அஜித் ரசிகர்களார் டுவிட்டரில் வெகு வேகமாக பரவி வருகிறது.

அஜித் சமீபத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்காக ஐதராபாத் சென்றார் அப்போது படப்பிடிப்பு நடிக்கும் இடத்தின் அருகே இட்லி கடை ஒன்று இருந்ததாகவும் அங்கு இட்லி வாங்கி சாப்பிட்டு ருசி பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த இட்லி கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவரது குழந்தைகள் பள்ளியில் படித்துக்கொண்டிருப்பதாகவும் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு பணம் சேர்க்க கஷ்டப்பட்டு கொண்டிருப்பதாகவும் தெரிந்த கொண்டார் அஜித்.

இதனை அடுத்து படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பும் போது இட கடைகாரருக்கு தனது உதவியாளர் மூலம் ரூபாய் ஒரு லட்சம் பணம் கொடுத்து விட்டு சென்றதாகவும் அவரது குழந்தைகளை நன்றாக படிக்க தனது வாழ்த்துகள் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.