Connect with us
 

News

சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம் !

Published

on

இயக்குனர் முத்தையா மேல் ஒரு குற்றச்சாட்டு உள்ளது அது என்னவென்றால் அவர் இயக்கும் படங்களில் சாதி கருத்துகள் இடம் பெறுகிறது என்று ஆனாலும் இவரின் படங்களுக்கு தென் மாவட்டங்களுக்கு நல்ல வரவேற்று உண்டு.

இந்நிலையில் இவர் கெளதம் கார்த்தியை வைத்து இயக்கிய தேவராட்டம் திரைப்படம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது ஆனாலும் அப்படம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் விக்ரம் பிரபு லஷ்மி மேனன் நடித்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம் இயக்கி அதை நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இப்போது இயக்குனர் முத்தையா கார்த்திக்கு ஒரு கதை சொல்லி அதற்கு கார்த்தியும் பச்சை கொடி காட்டியுள்ளாராம். இவர்கள் இதற்கு முன்னர் கொம்பன் என்ற படத்தில் பணியாற்றியுள்ளனர்.

தற்போது இவர்கள் இணையும் இப்படம் கொம்பன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது இப்படத்தை கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்கிறார்.