Connect with us
 

News

வீட்டிலிருந்து நடந்தே சென்று வாக்கு பதிவு செய்த சீயான் விக்ரம் !

Published

on

இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை 7 மணி முதல் மூத்த நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அதன் பின்னர் அஜித், சூர்யா, கார்த்தி, சிவகுமார், விஜய், சிவகார்த்திகேயன் என பல நடிகர் நடிகைகள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

இதில் நடிகர் அஜித் மக்களோடு நின்று வாக்கு செலுத்த நின்ற போது செல்பி எடுக்க வந்த நபரின் செல்போனை பறித்து எடுத்தார். நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் தன்னுடைய வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு நடந்தே வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.