Connect with us
 

News

கொரோனா இரண்டாவது அலை மீண்டும் தள்ளி போகும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு !

Published

on

பொன்னியின் செல்வன் என்ற நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் முக்கிய வேடத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், பிரபு, நிகழ்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு மணிரத்னம் அவர்களின் இசை கடவுள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்கள் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

800 ரூ கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் மணிரத்னம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு கிட்டத்தட்ட 9 மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 50 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று.

பின்னர் ஒரு மாதம் அனைவருக்கும் விடுமுறை விட்டு அடுத்தக் கட்ட படப்பிடிப்பை இம்மாதம் ஜெய்ப்பூரில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். தற்போது கொரோனா வைரஸ்ஸின் இரண்டாவரு அலை படு வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்பை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இது வரையில் சுமாராக 70 சதவீத முடிந்துள்ளது.