Connect with us
 

News

கோ திரைப்படத்தில் நான் நடிக்க வேண்டியது சில காரணங்களால் முடியாமல் போனது !

Published

on

ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி . ஆனந்த் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவரின் இறப்புக்கு திரை பிரபலங்கள் இரங்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சிலம்பரசனும் இரங்கள் தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பது.

தொடர்ச்சியான மரணங்கள் அதிச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிச்சியளிக்கிறது.

அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த் அவர்கள் கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழ்நிலையில் அப்படத்தை தவிர்க்கும்படியாகிவிட்டது.

சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன்.

தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக்கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ம மறுக்கிறது அவரது மரணம் பொய்யாக இருக்கக்கூடாது என்று அங்கலாய்க்கிறேன்.

இவ்வளாவு சீக்கிரம் அவரை இழப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர் இயக்குராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் அவர்கள் மிக முக்கியமான ஒருவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார்.

அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம் திரைதுறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் கரங்கள் இளைப்பாறட்டும்.

Continue Reading