Connect with us
 

News

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு !

Published

on

தமிழ் சினிமாவில் விஜய், ரஜினி, அஜித் இவர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவு ரசிகர்களை வைத்துள்ள ஒரே நடிகை என்றால் நயன்தாரா. முன்னணி நடிகர்கள் அனைவருடன் நடித்தாலும் இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களும் நடித்து வருகிறார். அதுவும் குறிப்பாக படத்தின் கதாநாயகியாகவும்.

அப்படி நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மாயா, அறம், அனாமிகா, இவருக்கு சினிமாவில் பெரும் திருப்புமுனையாக அமைத்தது. அதை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டோரா, இமைக்கா நொடிகள், ஐரா ஆகிய திரைப்படங்களில் நாயகன் இல்லாமல் படத்தின் கதாநாயகியாக நடித்து அப்பட்டை பெரும் வெற்றி படமாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றியடைய செய்தார்.

தற்போது நயன்தாரா அண்ணாத்த படத்தில் ரஜினியுடனும், விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு அதன் வெளியீட்டுக்காக காத்திருகிறார்.

இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே இனி நடிக்க முடிவு எடுத்துள்ளாராம் நயன். வெளியாகவுள்ள நெற்றிக்கண் திரைப்படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாகும்.