Connect with us
 

News

விடுபட்ட காட்சிகளை படமாக்கும் அண்ணாத்த படக்குழு !

Published

on

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் விடுபட்ட சில காட்சிகள் படமாக்க படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். வட மாநிலங்களில் இந்த காட்சிகளை எடுக்கவுள்ளனர். படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருததால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

நடிகை குஷ்பு தேர்தல் பணியில் ஈடுபட்டுயிருந்ததால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மீதம்வுள்ளதாம். இந்த படப்பிடிப்பில் அவரும் படப்பிடிப்பிடிப்பில் பங்கேற்பார். ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் நடித்து முடித்துவிட்டாராம்.

கொரோனா ஊரடங்கு மற்றும் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் சில மாதங்களுக்கு பிறகு ரஜினி ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு தான் நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளாஇயும் நடித்து முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பினார்.

நயன்தாரா காட்சிகளும் முடிந்து விட்டன. மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளாது. தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, என மிகப்பெரிய நட்ச்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர் இயக்குனர் சிவா இப்படத்தை இயக்கி வருகிறார்.