Connect with us
 

News

ஒரு முடிவுக்கு வந்த ஹன்சிகா – சிம்பு திரைப்படம் !

Published

on

காதல் முறிவுக்கு பின் சிம்பு ஹன்சிகா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மஹா. எடிட்டிங் பணிகள் தெரியாமலேயே முடிந்துவிட்டது என்றும் படப்பிடிப்பு முடியும் முன்னரே படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துவிட்டதாகவும் தனக்கு சம்பள பாக்கி இருப்பதால் அந்த சம்பள பாக்கியும் வரவில்லை என்றும் இப்படத்தின் இயக்குனர் ஜமீல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

இதனால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் ஹன்சிகாவின் 50-வது படம் மஹா என்பதால் ஹன்சிகாவும் அப்செட்யாகிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து சுமூக தீர்வை அடைந்துள்ளது. தற்போது நீதிமன்றம் மஹா படத்தை திரையிடுவததில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இயக்குனருக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை மற்றும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கொடுத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து சிம்பு ஹன்சிகா நடித்த மஹா திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவிருப்பதாகவும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் பிரச்சனை ஒரு வழியாக நல்ல முடிவுக்கு வந்ததில் நடிகை ஹன்சிகா மிகவும் மகிழ்ச்சியில் உள்ளாராம்.