Connect with us
 

News

விஷால் விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்த ஆர்.வி.சவுத்ரி !

Published

on

சினிமா தயாரிப்பாளார் ஆர்.பி.சவுத்ரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மூன்று வருடங்களுக்கு முன்பு விஷாலுக்கு இரும்புத்திரை படத்தை தயாரிக்க நானும் திரும்பூர் சுப்பிரமணியமும் சேர்ந்து கொடுத்தோம். அந்த பணத்தில் ஒரு தொகையை விஷால் பாக்கி வைத்து சக்ரா படத்தின் வெளியீட்டில் தருவதாகவும் தெரிவித்து பின்னர் வக்கீல் மூலமாக இரும்புத்திரை சக்ரா படங்களுக்கான வரவு செலவு கணக்கு முடிந்துவிட்டதாக ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

இரும்புத்திரை பைனான்சுக்காக விஷால் அளித்த உறுதி மொழி பத்திரங்கள் இயக்குனர் சிவகுமாரிடம் கொடுத்து வைந்த்திருந்தேன். ஆனால் சிவகுமார் இறந்து விட்டார். பத்திரங்கள் அவர் எங்கு வைத்துள்ளார் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் விஷால் அந்த உறுதிமொழி பத்திரங்களை வைத்து நான் மோசடி செய்ய முயற்சிப்பதாக போலீசில் புகார் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி எனக்கு வேதனை அளித்தன. சிவகுமாரிடம் இருந்த உறுதிமொழி பத்திரங்கள் அவரை சார்ந்த நபர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ இருந்தால் அதை என்னிடமோ அல்லது விஷாலிடமோ அல்லது காவல் துறையிடமோ ஒப்படைக்கவும். அதை மீறி வைத்திருப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.