Connect with us
 

News

கோமா நிலையில் சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் !

Published

on

திரைப்படங்கள் மூலம்தான் அதிகமானவர்கள் பிரபலமாவார்கள். ஆனால் சின்னத்திரை தொடர்களில் தனது சிறந்த நடிப்பால் மிகவும் பிரலமானவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய தொடர்களில் நடித்து சிறந்த ஒரு நடிகராக அனைவராலும் அறியப்பட்டார். அதை தொடர்ந்து பல தொடர்களில் நடித்தாலும் ராதிகாவின் வாணி ராணி தொடர்களில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார்.

தற்போது இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அது குணமாக தற்போது நிமோனியா நோய் வந்ததால் மூளையில் கட்டி வந்து அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள் இதன் காரணமாக தற்போது இவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் பலர் வேணு அரவிந்த் குணமடைய பிரார்த்தனையும் நலம் விசாரித்தும் வருகிறார்கள்.

Continue Reading