Connect with us
 

News

சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் புதிய படம் இன்று ஆரம்பம் !

Published

on

Lyca productions திரு சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு, தஞ்சையில் இனிதே தொடங்கியது !

லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் வழங்க, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண் அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் “Production No.22” படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 4, 2021) காலை தஞ்சாவூரில் இனிதே தொடங்கியது. தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது.இப்படத்தில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், என பலர் நடிக்கின்றனர்.