Connect with us
 

News

சார்பட்ட பரம்பரை இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளது – பா.ரஞ்சித் !

Published

on

தமிழில் வெற்றி பெற்ற திரைப்படங்களை இரண்டாம் பாகமாக எடுப்பது அதிகமாகி வருகிறது. ரஜினியின் இந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா, விக்ரமின் சாமி, தனுஷின் வேலை இல்லா பட்டதாரி, சுந்தர் சி.யின் அரண்மனை, சூர்யாவின் சிங்கம் இந்தியன் 2 என பல படங்கள் தயாராகியுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பா.ரஞ்சித் இயக்கிய இப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவானது. இப்படத்திற்கு பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது பற்றி பா.ரஞ்சித் கூறும் போது சார்பட்டா பரம்பரை படத்தில் வைக்க முடியாத சில விஷயங்களை முன்கதையாக வைத்து இரண்டாம் பாகம் எடுக்க யோசித்து வருகிறேன். 1925-ம் ஆரம்பிப்பது போல் இரண்டாம் பாகத்தின் கதைக்களம் இருக்கும். இதை வெப் தொடராகவோ இல்லை திரைப்படமாகவோ எடுக்கும் எண்ணம் உள்ளது என்றும் கூறினார்.