Connect with us
 

News

போதைப் பொருள் வழக்கில் ராணா மற்றும் ரகுல் பிரீத் சிங்குக்கு சம்மன் !

Published

on

தெலுங்கு திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக புகார் வந்தது. தெலுங்க்கான போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு திடீர் சோதனை நடத்தினர். பல இடங்களில் நடந்த சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு முழு அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பிரபல இயக்குநர் பூரி ஜெகந்தாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், ரவி தேஜா, நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட 12 பேர் மோதைபொருள் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் நடிகைகள் ரகுல் பிரீத், ராணா, ரவிதேஜா, இயக்குனர் புரி ஜெகந்நாத் நடிகை சார்மி, முமைத் கான் உள்ளிட்ட பலருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ரகுல் பிரீத் சிங் செப்டம்பர் 6-ம் தேதியும் ராணா செப்டம்பர் 8-ம் தேதியும், ரவி தேஜா செப்டம்பர் 9-ம் தேதியும் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவர்கள் சாட்சியங்களாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.