Connect with us
 

News

தளபதி 66 படத்திலிருந்து நடிகை அனன்யா பாண்டே நீக்கம் !

Published

on

பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் போதைப்பொருள் வழக்க்ல் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆர்யான் கானுக்கு ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வாட்ஸ் அப் விவாதத்தில் இந்தி நடிகை அனன்யா பாண்டே பெயர் இடபெற்றுள்ளது. ஆர்யான் கான் போதைப்பொருள் வாங்க அனன்யா பாண்டே உதவி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதனையடுத்து அனன்யா பாண்டே வீட்டில் சோதனை நடத்தினர் அதனை தொடர்ந்து அனன்யா பாண்டேவை நேரில் அழைத்து விசாரணையும் நடத்தினர். இந்த சம்பவம் பாலிவுட்டில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இவர் தளபதி விஜய் படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க அனன்யா பாட்டேவை ஒப்பந்தம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் வழக்கில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் எனவே அவரை தளபதி படத்திலிருந்து நீக்கி விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

ஆனால் இது பற்றி அனன்யா பாண்டேவிடம் கேட்டபோது முதல் என்னை ஒப்பந்தம் செய்தால்தானே நீக்க முடியும் என்று கூறியுள்ளார் இது யார் சொல்வது உண்மை என்று தெரியாமல் தவிக்கிறது சினிமா வட்டாரம்.