Connect with us
 

News

புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் கண்கலங்கிய சூர்யா !

Published

on

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார். இவர் பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனும் டாப் ஹீரோ சிவராஜ்குமாரின் தம்பியும் ஆவார்.

கடந்த மாதம் அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் இறப்பிற்கு அனைத்து சினிமா பிரபலங்களும் இரங்கள் தெரிவித்து வந்தனர் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற நடிகர்கள் நேரில் அவரின் சமாதிக்கு சென்று இறுதி அஞ்சலி செலித்தினர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா இன்று புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய சூர்யா தன்னை அறியாமலே கண்கலங்கி விட்டார் அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அதன் பின்னர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தை சந்தித்து அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளாராம்.