Connect with us
 

News

மாற்றத்துக்காக குடும்பத்துடன் துபாய் சென்ற சூர்யா !

Published

on

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில் பாமக மாவட்ட செயலாலர் பழனிச்சாமி என்பவர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார் இதற்க்காக இவர்மேல் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் அதற்கும் இவர்கள் அடங்கியபாடில்லை.

இந்த பிரச்சனையால் கடும் மன உளைச்சலில் உள்ளாராம் நடிகர் சூர்யா தற்போது ஒரு மாற்றத்துக்காக குடும்பத்தோடு துபாய் சென்றுள்ளாராம். சில தினங்களுக்கு அங்கு தங்கு குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்துவிட்டு பின்னர்தான் இந்தியா திரும்பவுள்ளாராம்.