Connect with us
 

News

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பட்டியலில் முதலிடம் பிடித்த பிரபாஸ் !

Published

on

பாகுபலி என்ற ஒரு படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களையும் தன் மீது கவனம் செலுத்த வைத்தவர் நடிகர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய பட்ஜெட் படங்களே. பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களையும் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், இந்தி, கன்னட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டு அதிலும் வசூல் பார்க்கிறது தயாரிப்பு நிறுவனம்.

பிரபாஸ் நடிப்பில் தற்போது ஆதிபுருஷ், ராதே ஷியாம், ஸ்பிரிட் ஆகிய படங்கள் வெளியீட்டு தயாராகியுள்ளது.

இந்த நிலையில்தான் ஆதிபுருஷ் மற்றும் ஸ்பிரிட் படங்களுக்கு பிரபாஸ் சம்பளம் ரூ.150 கோடி பேசிருப்பதாக தகவல் வெளியாகி தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ரசிகர்கள் பட்டியலில் சல்மான்கான், அக்ஹய்குமார் ஆகியோர் இருந்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒரு படத்திற்கு சுமார் ரூ.100 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.

கடந்த 10 வருடங்களாக இவர்களின் இந்த சம்பளத்தை யாரும் முந்தமுடியாத நிலையில் பிரபாஸ் முந்தி இவர்களை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

ஆத்புருஷ் படம் ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம். இதில் பிரபாஸ் ராமராகவும் இந்தி நடிகர் சயீப் அலிகான் ராவணாகவும் நடிக்கிரார்கள். கிரிதி சனோன் சீதையாக நடிக்கின்றார். இயக்குநர் ஓம் ரவுத் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.