Connect with us
 

News

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணையும் துருவ் விக்ரம் !

Published

on

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் படம் தோல்வியையே தழுவியது. தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மகான் படத்தில் தந்தையுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட தொழிநுட்ப பணிகள் நடந்து வருகிறது. மிக விரைவில் இப்படம் திரைக்கும் வரவிருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் காதல் கதையம்சம் கொண்ட ஒரு புதிய படத்தில் நடிக்க துருவ் விக்ரமுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா கூட்டணியில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கிமுடித்துள்ளார். இப்படமும் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.