Connect with us
 

News

மறைந்த நடிகை சித்ராவுக்கு ஓராண்டு நினைவஞ்சலி !

Published

on

ஒரு சிறு தொலைக்காட்சியிலிருந்து தன் கடீன உழைப்பாலும் திறமையாலும் உயர்ந்தவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடர் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது. யாருமே எதிர்பாராத விதமாக கடந்த வரும் இதே நாளில் உயிரிழந்தார். இன்றுடன் இவர் இறந்து ஒரு வருடமாகிவிட்டது.

இன்று பலரும் இவருக்கு சமூகவலைத்தளம் மூலமாக அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் தொடரின் சித்ராவுடன் இணைந்து நடித்த ஸ்டாலின் முத்துவும், ஹேமாவும் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

அதில் ஸ்டாலின் முத்து கூறுகையில் :- மனித வாழ்க்கையில் மரணம் என்பது இயற்கைதான் அது இயற்கையாக வந்தால் ஏற்றுக்கொள்ளலாம். நீ வாழ வேண்டிய வயதில் வாடிய மரலாக உதிர்ந்து போன உன்னை எப்படி மறப்பது என்று தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

அதே போலா ஹேமா கூறுகையில்:- நீ இல்லாமல் ஒரு வருடம் கடந்துவிட்டது. நீ இப்போது சந்தோஷமாக இருப்பாய் என நம்புகிறேன். நீ விரும்பியது போல் ஒரு வாழ்க்கையுடன் நீ திரும்பி வர வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். உன்னை அதிகம் மிஸ் செய்கிறேன் இது வெறும் போஸ்ட் அல்ல என் நினைவு லவ் யூ என்று கூறியுள்ளார்.