Connect with us
 

News

5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் எதற்கும் துணிந்தவன் !

Published

on

சூர்யா நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவுபெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். அதன்படி பிப்ரவரி 4-ம் தேதி வெளியாகிறது என்று அறிவித்துள்ளது படக்குழு.

ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சூர்யாவுடன் இப்படத்தில் ஜோடியாக ப்ரியங்கா மோகன் மற்றும் சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம் எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.