Connect with us
 

News

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா !

Published

on

நடிகை பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். இந்த செய்தியை இருவரும் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (ஜன.22) பகிர்ந்து கொண்டனர்.

அதில், “நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்கிறோம் என்பதை உறுதி செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது எங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதால், இந்த சிறப்பு நேரத்தில் எங்களது பிரைவசியை தரும்படி கேட்கிறோம். மிக்க நன்றி” என இருவரும் பதிவிட்டுள்ளனர்.

இருப்பினும் குழந்தையின் பாலினத்தை தம்பதியினர் இதுவரை வெளியிடவில்லை. இந்த ஜோடி பெற்றோராகும் செய்தியை அறிவித்த உடனேயே, சமூக ஊடக பயனர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

பிரியங்காவின் பதிவுக்கு, நடிகை லாரா தத்தா பூபதி “வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கமென்ட் செய்த தயாரிப்பாளர் குனீத் மோங்கா, “ஓ மை காட். இது மிகவும் சிறப்பானது… பெரிய பெரிய வாழ்த்துக்கள். சிறந்த செய்தி” என கூறியுள்ளார்.

பிரியங்கா, நிக் இருவரும் டிசம்பர் 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.