Connect with us
 

News

மனைவியை அடுத்து செல்வராகவனுக்கும் கொரோனா பாதிப்பு !

Published

on

இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, தனக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இயக்குநர் செல்வராகவன், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் தனக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தார். தன் செல்லமகள் லீலாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதை நினைத்து வருத்தப்பட்டார்.

இந்நிலையில் தனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செல்வராகவன் இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது :- எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று காலை தெரிய வந்தது. கடந்த 2, 3 நாட்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள் தங்கள் டாக்டரை அணுகி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள். அனைவரும் மாஸ்க் அணியுமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்கள். அப்பா, அம்மா இரண்டு பேருக்குமே கொரோனா என்றால் 3 பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.