Connect with us
 

News

விவாகரத்துக்கு ஆசைப்பட்டது சமந்தாதான் – நாகர்ஜூனா !

Published

on

சமந்தா மற்றும் நாகசைதன்யா 6 வருட காதலுக்கு பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 4 வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் கருத்து வேறு பாடு காரணமாக கடந்த வருடம் இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். இவர்களில் இந்த பிரிவு சினிமா உலகையே பெரும் அதிச்சி அடைய வைத்தது. பிரிந்தாலும் இருவரும் எதற்காக பிரிகிறோம் என்று வெளிப்படையாக கூறவில்லை.

இந்த நிலையில் நாகசைதன்யாவின் தந்தையான நாகர்ஜூனா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இது குறித்து பேசியுள்ளா. அதில் அவர் கூறுகையில் சமந்தா, நாகசைதன்யா விஷயத்தில் எல்லா அப்பாக்களை போலவே நானும் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் எனது மகன் எங்களை நினைத்து மிகவும் வருத்தப்பட்டான்.

அவர்களின் இந்த உறுதியான முடிவுக்கு பின்னர் எனது மகனுக்கு நாங்கள் ஆதரவாக இருந்தோம் இனியும் இருப்போம். அதோடு இந்த விவாகரத்து முழுக்க முழுக்க சமந்தாவினால் எடுக்கப்பட்டதுதான். அவர்தான் விவாகரத்துக்கு மிகவும் ஆசைப்பட்டார் என்று தெரிவித்தார் நாகர்ஜூனா.