Connect with us
 

News

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி !

Published

on

சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார். தெலுங்கில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் அனுதீப் அவர்கள் இயக்குநராக உள்ளார். மேலும், இந்தப் படத்தை அடுத்துக் கமல்ஹாசன் தயாரிக்கக் கூடிய புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். சோனி நிறுவனம் முதலீடு செய்ய இந்தப் படத்தின் தயாரிப்பாளராக கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் உள்ளது.

இந்தப் படத்தின் இயக்குநராக ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி உள்ளார். மேலும், இந்தப் படத்தில் நடிகை சாய்பல்லவி சிவ கார்த்திகேயனுக்குக் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளன. மேலும், இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும், முழுநீள ஆக்ஷன் எண்டெர்டெயினராக உருவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதாவது மே மாதம் 9 ஆம் நாள் மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்றைய நாள் சாய் பல்லவியின் பிறந்த நாள் ஆகும். இதனை ஒட்டி, இன்று வெளியிட்ட இந்த அறிவிப்பால் சாய் பல்லவி ரசிகர்களும், சிவகார்த்திகேயன் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பர் என்பது தெரிகிறது.