Connect with us
 

News

லியோ படப்பிடிப்பை நிறைவு செய்த இயக்குநர் மிஷ்கின் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. மேலும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், கெளதம் மேனன், மாத்யு தாமஸ், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு தொடர்ந்து அங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் லியோ படத்தில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.

சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினார்கள். உதவி இயக்குநர்களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.

என் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடன் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினானன், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்து கொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என மிஷ்கின் வெளியிட்டுள்ள கடத்ததில் தெரிவித்துள்ளார்.