Connect with us
 

News

தங்கலான் படத்தை வெளியிட நிபந்தனை விதித்த நீதிமன்றம் !

Published

on

தங்கலான் படத்தை வெளியிடும் முன்னர் ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை திருப்பு செலுத்தவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது. அப்போது தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

இந்த ரூ.1 கோடி டெபாசிட் நிபந்தனையால் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் வெளிவருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.