Connect with us
 

News

தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் – விக்ரம் !

Published

on

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தங்கலான். மேலும் இப்படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி, என் பலர் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளில் மட்டுமே சுமார் ரூ.26.44 கோடியை வசூல் செய்தது.

தமிழ் மட்டும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படத்தை ஆந்திராவில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆந்திராவிற்கு ப்ரோமோஷன் விழாவிற்கு சென்ற விக்ரம் பேசியதாவது ‘ தங்கலான் படத்தை நீங்க எல்லாரும் ரொம்ப லவ் பண்றீங்க படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. ஆந்திராவில் திரையரங்குகளும் அதிகரித்து வருகிறது. மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் பா.ரஞ்சித் மற்றும் எனக்கு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படம் இது.

தங்கலான் படத்தின் 2-வது பாகம் உருவாக வாய்ப்புள்ளது. இது பற்றி நான், பா.ரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் பேசி வருகிறோம். உங்கள் ஆதரவை பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளோம். ரஞ்சித்துடன் மீண்டும் பணியாற்ற இருக்கிறேன் என்று கூறினேன்.