Connect with us
 

News

விலங்கு இயக்குநர் பிரசாந்த் பாண்டியாரஜுடன் இணையும் சூரி !

Published

on

விலங்கு செப் சீரிஸ் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியாஜன். இவர் இயக்கும் அடுத்த படத்தில் சூரி நடிக்கவுள்ளார்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் பொறுத்த வரையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான புரூஸ் லீ ரசிகர்கள் மத்தியிலும் வசூலிலும் வரவேற்றை பெறவில்லை. அதன் பின்னர் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற இணைய தொடர் மூலம் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

தற்போது இவர் இயக்கும் புதிய படத்தில் சூரி கதாநாயனாக நடிக்கவுள்ளார். லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.