News
சசிகுமார், சத்யராஜ் மற்றும் பரத் நடிக்கும் புதிய திரைப்படம் !

இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும். M. குரு, இதற்கு முன்னர் இயக்குனர் இரா. சரவணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி, ஒரு வலுவான கதை சொல்லலுக்கு அடித்தளத்தை உருவாக்கியுள்ளார். இத் திரைப்படத்தை ஸம்பாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது, இந்தத் திரைப்படத்தை திரைத்துறையின் மூத்த தயாரிப்பாளர் தர்மராஜ் வேலுச்சாமி, விஜயகுமார் அவர்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் S.R. சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரபாண்டியன், கொடிவீரன் மற்றும் அயோத்தி ஆகிய படங்களில் தனது ஆத்மார்த்தமான பாடல்களுக்கு பெயர் பெற்ற என். ஆர். ரகுநந்தன் இசையமைக்க உள்ளார்.
பட்டுக்கோட்டை, மன்னார்குடி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர், வேதாரண்யம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவெளி இல்லாமல் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.