Connect with us
 

News

இது போன்ற கேவலமான ஒருவரின் பேச்சுக்கு என்ன செய்ய போகிறது தமிழ் சினிமா?

Published

on

நடிகர் ராதாரவி பொது இடங்களிலும் சரி மேடையிலும் சரி பேச தெரியாமல் பேசி பல சர்ச்சசைக்குரிய பிரச்சனைகளை சந்தித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று நயன்தாரா நடித்து வெளிவர இருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் விழா நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி நயன்தாரா ஒரு நல்ல திறமையுள்ள நடிகை அதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் இத்தனை வருடம் இந்த தமிழ் சினிமாவில் போராடி பல வெற்றிகளை கொடுத்து வருகிறார் அது பெரிய விஷயம்.

நம்ம தமிழ் நாட்டு மக்கள் எல்லாத்தையும் வெறும் நான்கு நாட்கள் மட்டுமே நினைவில் வைத்து இருப்பார்கள். ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார் , இன்னொரு பக்கம் சீதையாகவும் நடிக்கிறார், முன்பெல்லாம் கடவுளாக நடிக்க நடிகை கே.ஆர்.விஜயாவை தேடி போவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். பார்த்தவுடனே கும்பிடறவங்களையும், பார்த்தவுடனே கூப்பிடுறவங்களையும் கடவுள் வேடத்தில் நடிக்க வைக்குறாங்க’ என ராதாரவி பேசினார்.

ராதாரவின் இந்த பேச்சுக்கு நயன்தாரா ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நயன்தாராவை பார்த்தால் கூப்பிடுபவர் போல் இருக்கின்றதா? விக்னேஷ் சிவன் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும்., நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதே கருத்தை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading