Connect with us
 

News

அடங்க மறு இயக்குநரின் அடுத்த படத்தின் நாயகி பிரியா பவானி ஷங்கர் !

Published

on

தமிழில் தற்போது அதிக படங்களில் நடித்து வரும் ஒரே ஒரு நடிகை பிரியா பவானி சங்கர் மட்டுமே. தற்போது அவர் விஷாலுக்கு ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்குகிறார்.

இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்க மறு படத்தை இயக்கியவர். மீண்டும் ஜெயம் ரவியை வைத்து இரண்டாவது படம் இயக்கவிருந்த நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்தி நடிக்கும் படத்தை இயக்குவதற்க்கான கதை ஒன்றை உருவாக்கினார். ஆனால் கார்த்தி பொன்னியில் செல்வன் மற்றும் சுல்தான் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தவிட்டதால் இவரின் இயக்கதில் கார்தியால் நடிக்க முடியாத நிலை வந்தது.

எனவே பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசனை சந்திந்து கதை ஒன்றை சொல்ல கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியானது. மேலும் விஷாலுக்கு ஜோடியாக இப்படதில் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பிரியா பவானி சங்கரின் படங்கள் வெற்றி பெறாத நிலையில் தொடர்ந்து புதிய படங்கள் கிடைக்க என்ன ரகசியம் என்று மற்ற நடிகைகள் வாய்விட்டு புலம்பி வருகின்றனர்.