News

அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஷூட்டிங் நிறுத்தப்பட்டது !

Published

on

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’ நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா,குஷ்பூ உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ரஜினிகாந்த ஜனவரி முதல் அரசியலில் ஈடுபட உள்ளதால் இந்த படத்தை அதற்க்குள் முடிக்க வேலைகளை தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பணியாற்றிய 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்ப்பட்டுள்ளது இதை கேட்ட படக்குழு அதிர்ச்சியடந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனோ பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. அவர் ஹைதராபாத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அண்ணாத்த படக்குழு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றோ அல்லது நாளையோ அவர் சென்னை திரும்பலாம் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version