News

அப்போ நயன்தாரா இப்போஅஞ்சலியுடன் ஜோடி சேரும் யோகிபாபு !

Published

on

படத்திற்கு படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் செய்து நடிப்பில் முழுதாக தன்னை மாற்றி, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி, உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை அஞ்சலி. அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள “பூச்சாண்டி” திரைப்படமும் அவரது புகழுக்கு மேலும் ஒரு மணிமகுடமாக திகழும் என உறுதியாக தெரிகிறது.

The Soldiers Factory நிறுவனத்தின் சார்பில் K S சினீஷ் தயாரிக்க, கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படம் கண்டிப்பாகப் குழந்தைகள் கொண்டாடும் அட்டகாசமான கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை ஆருடம் சொல்வதாக அமைந்திருக்கிறது.

படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறியதாவது:-

“பூச்சாண்டி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் அபார வரவேற்பு, மனதிற்கு பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையாமாக கொண்டு, வேடிக்கைகள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அஞ்சலி தனது அற்புதமான நடிப்பால், படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அஞ்சலி கண்டிப்பாக குழந்தைகள் விரும்பும் நாயகியாக மாறிவிடுவார். அஞ்சலியும், யோகிபாபுவும் பேயாக நடித்துள்ள பகுதிகளை, குழந்தைகள் 100 சதவீதம் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

மேலும் விஜய் டீவி புகழ் ராமர் ஒரு முக்கிய பாத்திரத்தில் வந்து, படத்தின் காமெடிக்கு மேலும் வலு சேர்த்துள்ளார். படத்தின் 95 % படப்பிடிப்பு முடிக்கப்பட்டுவிட்டது. மீதமிருக்கும் காட்சிகளும் விரைவில் முடிக்கப்பட்டுவிடும். விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். “பூச்சாண்டி” திரைப்படம் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

Trending

Exit mobile version