News

மே மாதம் ஆரம்பிக்கும் செல்வராகவன் – தனுஷ் இணையும் நானே வருவேன் படப்பிடிப்பு !

Published

on

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் திரைப்படம் நானே வருவேன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியானது. செல்வராகவன் – தனுஷ் இருக்கும் மயக்கம் என்ன படத்திற்கு பின்னர் சுமார் பத்து ஆண்டு இடைவெளிக்கு இருவரும் இணைகிறார்கள். அதிரடி த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.அதில் ஒருவர் தமன்னா என்று சமீபத்தில் தகவல் வெளியானது.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஒரு பாடலையும் யுவன் ஷங்கர் ராஜா கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம்.

இப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் – தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 திரைபப்டத்தில் இணைகிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நானே வருவேன் படப்பிடிப்பு வரும் மே மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

Trending

Exit mobile version