Connect with us
 

News

இந்த முறை கொஞ்சம் பொறுப்பு அதிகமாக இருக்கிறது – அட்லீ

Published

on

தற்போது தளபதி விஜய் அவர்கள் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அமெரிக்காவில் எடுத்து முடித்தனர்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக ஜோடி சேர்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார் , ராதாரவி பழ.கருப்பையா ஆகியோர் மிக முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு பின்னர் விஜய் – அட்லீ கூட்டனி மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இதை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

சமீபத்தில் நடந்த ஃஎப்எம் சேனல் ஒன்றின் விருது வழங்கும் விழாவில் அட்லீ பேசும்போது, ‘எப்போதுமே பயப்படவே மாட்டேன். ஆனால், இந்த முறை கொஞ்சம் தைரியம், பொறுப்பு அதிகமாகி இருக்கிறது. இதுவரைக்கும் பண்ணாத ஒன்று பண்ணனும் என்று ஓடிக் கொண்டிருக்கிறேன். கதை முடிவாகி, வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் எதிர்பாராத விஷயங்களை எதிர்பாருங்கள். அது எந்த மாதிரியான படம் என்பதெல்லாம் இப்போதைக்குச் சொல்ல முடியாது’ என தெரிவித்தார்.