News

இனி இப்படி யாரையும் ஏமாற்றாதீர்கள் – கார்த்திக் நரேன்

Published

on

துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் இளம் வயது இயக்குனராக அனைவராலும் பாரப்பட்டவர் இயக்குநர் கார்த்திக் நரேன்.

இவர் தற்போது நரகாசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்நிலையில் இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார். இதனை தொடர்ந்து கௌதம் மேனனை விமர்சிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார் கார்த்திக் நரேன். இது திரையுலகினர் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் மேனன் ஒரு வீடியோவை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதைக் குறிப்பிட்டு “பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன்.

ஆனால் என்னை நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்யவேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும்  இப்படி ஏமாற்றாதீர்கள்” என கார்த்திக் நரேன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Trending

Exit mobile version