News

இரண்டு முறை இணையும் வாய்ப்பு கிடைத்தும் நாங்கள் இணையவில்லை !

Published

on

தமிழ் சினிமாவில் 90-ம் ஆண்டு காலகட்டத்தில் தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளை என பெயர் எடுத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். எவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளமே இவர் படத்தில் இருந்தாலும் சொன்ன அந்த தேதிக்குள் சொன்ன பட்ஜெட்டுக்குள் படம் எடுத்து கொடுப்பத்தில் இவரை மிஞ்ச எந்த இயக்குநரும் இல்லை.

கே.எஸ்.ரவிக்குமார் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் ஆஸ்தான இயக்குனராக இருந்தவர் அவர் தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்கிய படம் ‘மின்சாரக் கண்ணா’

அந்த படத்திற்க்கு பின்னர் இருவரும் மீண்டும் இணையவே இல்லை. இதை பற்றி அவரிடம் கேட்ட போது நாங்கள் இணையும் வாய்ப்பு இரண்டு முறை வந்தது ஆனால் சில பிரச்சனைகளால் அது நடக்காமல் போனதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவலை கேட்ட விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. அப்படி இருவரும் மீண்டும் இணைந்திருந்தால் விஜய்யின் சினிமா பயணத்தில் அது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

Trending

Exit mobile version