News

எனக்கு படத்தின் க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை என விலகிய தளபதி விஜய்

Published

on

2002-ஆம் ஆண்டி சூர்யா-லைலா மற்றும் ஸ்னேகா நடிப்பில் இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி சூர்யா என்ற ஒரு நடிகரை தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிய படம்தான் ‘உன்னை நினைத்த ‘ இந்த படத்தின் பாடல்களும் சரி படமும் சரி இன்று வரையில் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து வருகிறது.

ஆனால் இந்த படத்தில் சூர்யா இரண்டாவது நாயகன்தான் ஆமாம் முதலில் இந்த படத்தை தளபதி விஜய் அவர்கள்தான் நடிப்பதாக இருந்தது படத்தின் ஷூட்டிங்கும் இரண்டு மாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் விஜய் அவர்களுக்கு படத்தின் இறுதியை கூறினாராம் இயக்குனர் விக்ரமன் அதை கேட்ட விஜய் எனக்கு இந்த முடிவு பிடிக்கவில்லை படத்தில் இருந்து நான் விலகிவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு விலகி விட்டாராம் இந்த உண்மையை தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் நடிகை லைலா அவர்களே கூறியிருந்தார்.

அப்படி பாதியில் நின்ற படத்தை நடிகர் சூர்யாவை வைத்து மிகப்பெரிய வெற்றி படமாக ரசிகர்களுக்கும் சரி சூர்யாவுக்கு சரி கொடுத்தார் இயக்குநர் விக்ரமன்.இந்த படம் வெளியாகி பல வருடங்கள் கழித்து விஜய் – லைலா நடித்த ஒரு சில காட்சிகளில் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலாகி பேசப்பட்டது.

இது குறித்து இயக்குநர் விக்ரமனும் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இதை அறிந்த தளபதி ரசிகர்கள் இப்படி ஒரு நல்ல படத்தை நம்ம தளபதி தவற விட்டு விட்டாரே என்று கூறி பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

Trending

Exit mobile version