News

என் அன்பு நண்பனின் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை – சந்தானம் !

Published

on

2013-ம் வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தமிழில் ஒரு நடிகராக அறிமுகமானவர் சேதுராமன் அந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதனை தொடர்ந்து வாலிப ராஜா,சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 என படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இவர் ஒரு நடிகர் மட்டுமின்றி எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த தோல் மருத்துவர் அது மட்டுமில்லாமர் பல தொலைக்காட்சிகளிலும் இவரின் யூடியூப் சேனல்களில் பல மருத்துவ ஆலோசனைகளை மக்களுக்கு கூறி வந்தவர். இந்த நிலையில் நேற்று இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் இவர் மரணம் அடைந்தார் இவருக்கு வயது 34 இவரின் மரணம் தமிழ் திரையுலகினரை மிகவும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

இவரின் மிக நெருங்கிய நண்பர் நடிகர் சந்தானம் அவர்கள் இவரின் மரண செய்தியை கேட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘என் அன்பு நண்பர் டாக்டர் சேதுவின் மரணம் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் எனக்கு மிகவும் மனம் அழுத்தமாக உள்ளது அவனது ஆத்மா அமைதியாக இருக்கட்டும் என்று மிகந்த துக்கத்துடன் பதிவு செய்யுள்ளார்.

Trending

Exit mobile version