News

ஹாலிவுட்டில் ஒரு கிங்காங் தமிழில் ஒரு கபி !

Published

on

ஹாலிவுட்டில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் மனித குரங்கை வைத்து உருவான திரைப்படம் கிங்காங். இத்திரைப்படத்தின் கதை ஒரு மனித குரங்கு ஒரு அழகான பெண் மேல் ஆசைப்பட்டு அவளை காதல் கொள்கிறது பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.

ஹாலிவுட்டில் வெளியானாலும் சினிமாவில் இது போன்ற திரைக்கதை புதிதாக இருந்தது. அதனை அனைத்து தரப்பு மக்களும் ரசித்து கொண்டாடினர் வசூலில் வாரி குவித்தது அத்திரைப்படம்.

இப்போது அதே போல கிங்காங் படம் போலவே தமிழில் மனித குரங்கை வைத்து கபி என்ற திரைப்படம் உருவாகிறது. இப்படத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரலி தயாரிக்கவுள்ளார்.

இப்படம் அனிமேட்ரானிக்ஸ் மற்றும் விஷுவர் எபெக்ட்ஸ் தொழிநுட்ப முறையில் முதன் முறையாக இந்தியாவில் தமிழ் சினிமாவில் உருவாகிறது.

இப்படத்தை கவுசிக்கரா மற்றும் என்.ராமசாமி இணைந்து கதை எழுதியுள்ளனர். இப்படத்திற்காக மிகப்பெரிய கணினி நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவெற்பை பெற்று வருகிறது.

Trending

Exit mobile version