News

கேரள மக்களுக்கு 70 லட்சம் நிதியுதவி செய்த தளபதி விஜய்

Published

on


கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்காக இதுவரை நடிகர், நடிகைகள் கேரள முதல்வரின் நிவாரண நிதியாக லட்சக்கணக்கில் வழங்கி வரும் நிலையில் நடிகர் விஜய் மட்டும் வித்தியாசமாக கேரள மக்களுக்கு நேரடியாக நிதியுதவி சென்று சேரும் வகையில் நிதியுதவி செய்துள்ளார்.

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய அனைத்து மாவட்ட மக்கள் இயக்க
ரசிகர்களுக்கும் 3 லட்சம் அனுப்பியுள்ளார்.(ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 லட்சம் ) முகாமில் தஞ்சமடைத்தவர்களுக்கும் மற்றும் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வாங்குவதற்கு பணம் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த நிவாரண பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டத்திலிருந்து 15 லாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு வழங்கப்படுகிறது.இன்று இரவு இந்த லாரிகள் அனைத்தும் கேரளாவில் உள்ள எர்ணாகுளம்,ஆலப்புழா,பத்தானம்திட்டா,பாலக்காடு மற்றும்
பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரிசி ,பருப்பு ,சர்க்கரை ,கோதுமைமாவு ,ரவை ,மைதா,ஆடைகள் ,போர்வைகள் ,பெட் சீட் ,பால் பௌடர் ,நாப்கின்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

எதிலும் வித்தியாசமாக சிந்திக்கும் விஜய், நிவாரண உதவி விஷயத்திலும் வித்தியாசமாக சிந்தித்து செயல்பட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Trending

Exit mobile version