News

சுனைனாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது !

Published

on

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது பிரபலங்கள் பலர் இந்த இரண்டாம் அலையில் வைரஸ் தொற்றில் சிக்கி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை சுனைனாவுக்கும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை,சமர், காளி,எனை நோக்கு பாயும் தோட்டா உள்ளிட்ட தன் கதாப்பாத்திரதுக்கு சவாலான வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.

சுனைனாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியியுள்ளதாவது – நான் மிகவும் கவனமாக இருந்தேன் ஆனாலும் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளாது. இதனால் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி இருக்கிறேன். அனைத்து நெரிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன்.

எனது குடும்ப உறுப்பினர்கள் தவிர யாரையும் நான் தொடர்பு கொள்ளவில்லை. குடும்பத்தினர் தனிமையில் உள்ளனர். தயவு செய்து அனைவரும் முக கவசம் அணியுங்கள் வீட்டில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அனைவருக்காவும் நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version