Connect with us
 

News

கோமாளி இயக்குனர் இயக்கத்தில் அடுத்து சீயான் விக்ரம் ?

Published

on

இந்த ஆண்டு வெளியான படங்களில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் படத்தை நம்பிய அனைவருக்கும் மிக பெரிய லாபம் கொடுத்த படம் ஜெயம் ரவியின் கோமாளி இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.இப்படத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்க்கு புது ஹோண்டா சிட்டி காரைப் பரிசாக அளித்தார்.

இந்த வெற்றியியை தொடர்ந்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இரண்டாவது படத்தையும் வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷனல் சார்பில் மீண்டும் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார்.இந்த படத்தில் கதை நாயகனான நடிப்பின் சிகரம் என்று கொண்டாடப்படும் சீயான் விக்ரம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

படம் மிக குறுகிய கால காலகட்டத்தில் உருவாகும் என்றும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.