News

சர்கார் படத்தின் டப்பிங்கை துவங்கிய விஜய்

Published

on

விஜய் – முருகதாஸ் மூன்றாவது முறையாக இனைந்திருக்கும் படம்தான் சர்கார். இந்த படத்தை சன் பிக்சர்ட்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.

முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது சென்னை அருகே கிழக்கு கடற்கைரை சாலை செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்து இந்த மாத இறுதியில் படக்குழு லாஸ் வேகாஸ் செல்கிறது. அங்கு பாடல் காட்சிகளை படமாக்க இருக்கின்றனர். இதனால், இதற்கு இடையில், நடிகர் விஜய்  தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது, லாஸ் வேகாஸ் கிளம்புவதற்குள் தன்னுடைய போர்‌ஷனுக்கு டப்பிங் பேசி முடித்துவிட விஜய் திட்டமிட்டுள்ளாராம்.

Trending

Exit mobile version