News

சிம்பு மற்றும் பிரபு தேவா இருவரையும் பிரிந்தது ஏன் மனம் திறந்த நயன்தாரா !

Published

on

சிம்புவுடன் முதல் முறையாக காதலில் விழுந்த நயன்தாரா பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிம்புவை விட்டு பிரிந்தார் நயன்தாரா. அதன் பின்னர் இயக்குநர் மற்றும் நடிகருமான பிரபுதேவா அவர்களை மிக தீவிரமாக காதலித்தார் இவரின் பெயரை எல்லாம் கையில் டாட்டூ போட்டுக் கொண்டார் நயன்தாரா.

பிரபு தேவாவுடனான காதல் சுமார் 4 வருடங்கள் நீடித்தது. பிறகு திடீரென அவருடனும் மோதல் ஏற்ப்பட்டு அவரையும் விட்டு பிரிந்தார் நயன்தாரா. இருந்த போதும் இந்த காதல் பிரிவுகளை பற்றி நயன்தாரா ஒரு நாள் கூட பத்திரிக்கையாளர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. இது பற்றி கண்டிப்பாக கேள்வி கேட்ப்பார்கள் என்ற காரணத்தால்தான் மீடியாவிடம் பேசாமல் இருந்து வந்தார் இத்தனை ஆண்டு காலமாக.

இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து இது பற்றி பேசியுள்ளர் நயன்தாரா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இது பற்றி பேசிய இவர் கூறியது காதல் என்பது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் நம்பிக்கை இழந்து விட்டால் அந்த காதலையும் இழக்க வேண்டியதுதான் எனது முதல் இரண்டு காதலிலும் இதுதான் நடந்தது என்று கூறினார் நயன்தாரா.

Trending

Exit mobile version