News

சூர்யாவை அடுத்து அஜித்துக்காக கதை எழுதும் பெண் இயக்குநர் !

Published

on

மாதவனை வைத்து ‘இறுதிச் சுற்று’என்ற ஒரு மிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யாவை வைத்து ‘சூரரைப் போற்று’ படத்தை எடுத்து முடித்தார் இயக்குநர் சுதா கொங்காரா. படம் விரைவில் திரைக்கு வரவிருந்தது ஆனால் தற்போது உள்ள ஊரடங்கு காரணமாக படம் வெளியீடு தள்ளிபோய்விட்டது.

இது ஒரு புறம் இருக்க தனது அடுத்த படத்திற்காக கதையை எழுதும் வேலையில் இறங்கி விட்டாராம் சுதா கொங்காரா இந்த படத்தின் கதையை முழுக்க முழுக்க அஜித்தை மனத்தில் வைத்துதான் இந்த கதையை எழுதி வருகிறாராம். இது பற்றி அஜித் தரப்பில் சுதா கொங்காரா பேசி விட்டதாகவும் கதையை தயார் செய்து விட்டு கூறும்படி கூறியுள்ளாராம்.

தற்போது வினோத் இயக்கதில் ‘வலிமை’ படத்தில் நடித்து வரும் அஜித் இந்த படத்தின் படப்பிடிப்புக்களை முடித்த பிறகே சுதா கொங்காரா படத்திற்க்கு கால்ஷீட் கொடுப்பார். ஆனாலும் இது இன்னமும் உறுதியாகவில்லை சுதா கொங்காரா கூறும் கதை அஜித்துக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பார் என்று அஜித் தரப்பு கூறுகிறது.

Trending

Exit mobile version