News

சூர்யாவுடன் 6வது முறையாக இயக்குநர் ஹரி இணையும் ‘அருவா’ !

Published

on

சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 39வது படத்தை ஹரி இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

சூர்யாவுடன் இயக்குனர் ஹரி 6வது முறையாக ” அருவா” என்ற படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே சூர்யாவுடன் இயக்குனர் ஹரி ஆறு ,வேல், சிங்கம் ,சிங்கம் 2 ,சிங்கம் 3 என வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். 6 வது முறையாக சூர்யா ஹரி கூட்டணியில் அருவா படம் உருவாக இருக்கிறது இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

முதல் முறையாக இந்தப்படத்தில் சூர்யாவுக்கு இசையமைக்கவுள்ளார் இசையமைப்பாளர் டி இமான். “அருவா “படத்தின் ஹீரோயின் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.சூர்யாவின் 39வது படமான அருவா குறித்த அறிவிப்பு வந்தவுடன் சமூகவலைதளங்களில் #Aruvaa Diwali2020 என்ற ஹாஸ்டாக் ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

By : Saranya

Trending

Exit mobile version