News

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா?

Published

on

2018-ம் ஆண்டு பரியேறும் பெருமாள் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இப்படத்தில் கிடைத்த வெற்றி தனுஷ் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது. அந்த திரைப்படம் வெளியாகி இன்று தமிழ் சினிமா உலகமே இவரையும் கர்ணன் படத்தையும் புகழ்ந்து வருகிறது.

கர்ணன் படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் தயாரிப்பில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இத்திரைப்படம் கபடி விளையாட்டை மையப்படுத்து உருவாக உள்ளதாம்.

இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்ற ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆனாலும் இது குறித்து இரு தரப்பில் இருந்தும் எந்தவித அதிகார்வபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Trending

Exit mobile version