Connect with us
 

News

செப்டம்பரில் ஆரம்பமாகும் சூர்யா வின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு !

Published

on

மிகவும் எதிர்ப்பார்ப்புக்குறிய படமான சூர்யாவின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளது.தற்போது இயக்குனர் பாண்டிராஜின் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா அதன் படப்பிடிப்பு வேலைகளை ஜூன் மாதத்தில் முடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனை முடித்து சிறு இடைவெளிக்குப் பின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு அவர்கள் ஏற்கனவே கடந்த 2019 டிசம்பரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான “வி கிரியேஷன்ஸ்” தயாரிப்பில் முக்கிய இயக்குனர் வெற்றி மாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படம் உருவாகும் என அறிவித்திருந்தார்.

படப்பிடிப்பிற்கான தள வேலைகள் கடந்த செப்டம்பரிலே துவங்கிவிட்டது.கடந்த ஆண்டே இப்படம் முடிந்திருக்க வேண்டியது.கொரோனாவால் இப்படத்தின் வேலைகள் பாதியில் நிறுத்தப்பட்டன.தற்போது பாண்டிராஜின் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா இதன் படப்பிடிப்பு முடிந்த பின் குடும்பத்தினருடன் கோடை விடுமுறை முடித்து வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புக்கு திரும்புவார்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். சிறந்த எழுத்தாளர் சி. எஸ் செல்லப்பாவின் வாடிவாசல் என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்படவுள்ளது.